தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனத்தால் இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நீலகிரி, கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூரில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 3,4,5-ல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று முதல் ஆக.5 வரை அரபிக் கடலின் தென்மேற்கு, வடக்கு, மத்திய மேற்கு பகுதிகளில்பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் 4 நாட்களுக்கு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: