சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு உடல் வெப்பநிலையை கண்டறியும் தெர்மல் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதால் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பதாக கூறினார். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு சென்னை விமான நிலையத்திலேயே உடல் வெப்பநிலையை கண்டறியும் தெர்மல் பரிசோதனை நடத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.