சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு துணை தேர்வுகளை தனி தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நமது மாநிலத்தில் 2021ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்களித்ததை போல 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு துணை தேர்வுகளை தனி தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவின் அடிப்படையில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.