புதுவையில் தியேட்டர்கள் செயல்பட அனுமதி

புதுச்சேரி: புதுவையில் கூடுதல் தளர்வுகளுடன் ஆக.15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தினமும் இரவு 10  முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். சில்லரை மதுக்கடை, சாராயம், கள்ளுக்கடைகள் இயங்கலாம். அனைத்து வழிபாட்டுதலங்களிலும் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். புதிய தளர்வாக, தியேட்டர்கள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு, அதில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதித்து இரவு 9 மணி வரை இயங்கலாம் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: