ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

புழல்: பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர்  நேற்று முன்தினம் சோழவரம் போலீசாரிடம் சரணடைந்தார். இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த ஜோதி நகரை சேர்ந்த பிரபல ரவுடியான சண்முகப்பாண்டியன்(26), கஞ்சா வியாபாரிகளை மாமூல் கேட்டு மிரட்டி வந்தார். இதுகுறித்து தகராறில் கடந்த 28ம் தேதி அப்பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் சிலர் சேர்ந்து அவரை கழுத்தறுத்து படுகொலை செய்தனர். இந்த வழக்கில் சோழவரம் போலீசார் நாரவாரிகுப்பம் மணிகண்டன், பொத்தூர் வேலு (எ) முருகன், பாடியநல்லூரை சேர்ந்த பிரிதிவிராஜ் ஆகிய 3 பேரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்த கணேசன்(25), சோழவரம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் பொன்னேரி நீதிமன்றத்தில் புழல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: