நாகை: நாகை வட்ட வழங்கல் அலுவலரிடம் ரூ.21,000 ரொக்கம் பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது. 139 ரேஷன் கடை பணியாளர்களிடம் வட்ட வழங்கல் அலுவலர் பூபதி பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.