சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். அதேபோல், நாளை முதல் வரும் 3ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.