இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு!: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த போது ஏன் 4.5 லட்சம் பேருக்கு மின் இணைப்பு தரவில்லை? என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் மின்தடை ஏற்படுவது போன்ற மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் செய்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: