ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42.23 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,223,477 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 197,966,640 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 178,883,251 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 87,562 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு தற்போது 14,859,912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.