செங்கல்பட்டு ஜூலை 31: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (40). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டுகிறார். நேற்று முன்தினம் இரவு கோவிந்தராஜன், கூடுவாஞ்சேரி அருகே ஓட்டலில் காரை நிறுத்தினார். அப்போது அவரை, செல்போனில் தொடர்பு கொண்ட நபர் செங்கல்பட்டு செல்லவேண்டும். தன்னை மறைமலைநகரில் பிக்கப் செய்யும்படி கூறியுள்ளார். அதன்படி அவர், மறைமலைநகர் சென்றார். அங்கு 3 பேர் காரில் ஏறினர். சிங்கபெருமாள்கோயில் அடுத்த மல்ரோசாபுரம் அருகே கார் சென்றபோது, 3 பேரும், கோவிந்தராஜனின் கழுத்தில் கத்தியை வைத்து, காரை நிறுத்தினர்.