×

சபரிமலையில் ஆகஸ்ட் 16ல் நிறைபுத்தரிசி பூஜை

திருவனந்தபுரம்: சபரிமலை    ஐயப்பன் கோயிலில் வருடம் ேதாறும் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும்.    நாட்டில் விவசாயம் செழித்து பட்டினி ஒழிய வேண்டும் என்பதற்காக இந்த பூஜை    நடத்தப்படுகிறது. பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக பூஜை செய்த    நெற்கதிர்கள் வழங்கப்படும். இதை அவர்கள் தங்கள் வீடுகளின் வாசலில் கட்டி   வைத்திருப்பார்கள். இந்த வருட நிறைபுத்தரிசி பூஜை ஆகஸ்ட் 16ம்  தேதி  நடக்கிறது.   இதையொட்டி, 15ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.  16ம் தேதி அதிகாலை   5.55 மணிக்கு பூஜை நடைபெறும். இதையொட்டி, 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு   அனுமதிக்கப்படுவார்கள்.


Tags : Niraiputtarisi Puja ,Sabarimala , Sabarimala, Mass Buddha Puja, Iyappan Temple
× RELATED பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு