நகைக்கடையில் நூதன திருட்டு: தம்பதி கைது

அண்ணாநகர்: முகப்பேரை சேர்ந்த பிரீத்தம்குமார் (32), அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் ஒரு ஆண், செயின் வாங்க வேண்டும் என கடை ஊழியர்களிடம் கூறினர். அவர்கள், பல செயின்களை காண்பித்தனர். அதில், ஒரு செயினை தேர்வு செய்த அவர்கள், அதற்கான பணத்தை அருகில் உள்ள ஏடிஎம்மில் எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. பின்னர், செயின்களை ஊழியர்கள் சரிபார்த்தபோது, 3 சவரன் செயின் மாயமானது தெரிந்தது.

 உடனே, சிசிவிடி கேமரா பதிவுகளை பார்த்தபோது, அந்த ஆணும், பெண்ணும் செயினை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீசில்  பிரீத்தம்குமார் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், பல்லாவரம் சண்முகம் நகரை சேர்ந்த தாட்சாயிணி (47), அவரது கணவர் சந்திர குமார் ஆகியோர் செயினை திருடிச் சென்றது தெரிந்தது. தனிப்படை போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 சவரன் பறிமுதல் செய்யப்பட்டது. தாட்சாயிணி மீது ஏற்கனவே கிண்டி, ஆவடி, பூந்தமல்லி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 10 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: