புதுடெல்லி: புரட்சிகர இயக்கங்களை வழிநடத்திய வங்காளம், இன்று இந்தியாவுக்காக போராடுகிறது என்று டெல்லியில் மம்தாவை சந்தித்த பாடலாசிரியர் கூறினார். மேற்குவங்க முதல்வர் பானர்ஜி, ஐந்து நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோரை மம்தா சந்தித்தார். இந்நிலையில், நேற்றிரவு இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மற்றும் நடிகை ஷபானா ஆஸ்மி ஆகியோர் மம்தாவை சந்தித்தனர். அதன்பின், ஜாவேத் அக்தர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘புரட்சிகர இயக்கங்களை வழிநடத்தியதில், வரலாற்று ரீதியாக வங்காளம் எப்போதுமே ஒரு படி மேலே உள்ளது.