அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சென்ற பின் 2017 செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூடியது. பொதுக்குழுவில் சசிகலா, தினகரனை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: