டோக்கியோ: ஒலிம்பிக் குத்துசண்டை போட்டியில் தோல்வியடைந்த இந்தியாவின் மேரி கோம், நடுவரின் ஒருதலைபட்சமான முடிவால்தான் தோல்வி அடைந்ததாகவும் இதற்கு நிச்சயம் நீதி கேட்பேன் என்றும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது போட்டியின் முதல் சுற்றில் இருவரும் ஆவேசமாக விளையாடியதாகவும் 2-வது மற்றும் 3-வது சுற்றில் நான் தான் வெற்றி பெற்றேன் என்றும் ஆனால் நடுவரின் முடிவு தவறாக இருந்தது என்றும் இதனை எதிர்த்து நீதி கேட்பேன் என்றும் மேரிகோம் கூறியுள்ளார்.