×

நகைப்பிரியர்களுக்கு கவலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.36,496க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தங்கம் விலையேற்றம் மேலும் கவலையளிப்பதாக உள்ளது.

நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  இதனால், தொழில் துறை முடக்கம், வருவாய் இழப்பு, பாதுகாப்பான முதலீடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினர்.

இதனால், தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. இந்த நிலையில்,  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.36,496க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் விலை ரூ.21 உயர்ந்து ரூ.4,562க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20க்கு விற்பனையாகிறது.

Tags : Chennai , Chennai, Gold, Price, Sale
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...