சென்னை: கோரிக்கைகளை பதிவிடுக என்ற திட்டம் மூலம் இதுவரை 3,401 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் தங்களது கோரிக்கைகளை பதிவிட ஏதுவாக மே மாதம் புதிய இணையதளம் தொடங்கப்பட்டிருந்தது. கோயில் புதுப்பித்தல், ஆக்கிரமிப்புகள் மீட்பு, கோயில் பணியாளர்களுக்கான ஊதியம் பற்றி மனுக்கள் வந்துள்ளன. மனுக்கள் மண்டல வாரியான அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்திருந்தது.