அகழாய்வு தேவையற்றது என்போரின் வயிறு எரியட்டும்; உணர்வு பொங்கட்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்

அவனியாபுரம்: மதுரை வந்த அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி:  உலக பொதுமறையாக இருக்கக்கூடிய திருக்குறளை, தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென ஒன்றிய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழர்களின் தொன்மை வரலாறு உள்ளிட்டவை அறிவியல்பூர்வமாக தெரிய வருகிறது. தற்போது கீழடியில் வெள்ளியிலான முத்திரை காசு கிடைக்கப் பெற்றது. அது கிமு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது.. இவ்வளவு சான்றுகள் கிடைத்தும் இதனை ஏற்க சிலருக்கு மனம் வரவில்லை. தமிழின் பெருமை, தமிழின் தொன்மை உலகளவில் பரவி வருவதால் சிலருக்கு வயிறு எரிகிறது. அகழாய்வு தேவையற்றது என்போரின் வயிறு நன்றாக எரியட்டும்; தமிழ் உணர்வு பொங்கட்டும். எதிர்ப்பவர்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்வோம் என்றார்.

Related Stories: