சென்னை: தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் நடத்திய இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக அரியர்ஸ் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்ததின் பேரில் அவர்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் இறுதிப் பருவத் தேர்வு நடந்தது. இந்த தேர்வை 19 ஆயிரத்து 184 பேர் தேர்வு எழுதியதில் 18 ஆயிரத்து 727 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 97.62 சதவீதம். இதற்கான முடிவுகள் நேற்று மாலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.