ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கம், தர்மா நகரை சேர்ந்தவர் கந்தப்பன் (57). நில புரோக்கர். இவரது மனைவி ஜெயந்தி. இவரது மூத்த மகன் சுனில் (30). சமீபத்தில் இவருக்கும், திருவொற்றியூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அடுத்த மாதம் 20ம் தேதி அம்பத்தூர் ஐசிஎப் காலனியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி, இரு வீட்டாரும் உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தனர்.