மகனின் திருமணம் திடீர் நிறுத்தம் தந்தை தூக்கிட்டு தற்கொலை

ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கம், தர்மா நகரை சேர்ந்தவர் கந்தப்பன் (57). நில புரோக்கர். இவரது மனைவி ஜெயந்தி. இவரது மூத்த மகன் சுனில் (30). சமீபத்தில் இவருக்கும், திருவொற்றியூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அடுத்த மாதம் 20ம் தேதி அம்பத்தூர் ஐசிஎப் காலனியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி, இரு வீட்டாரும் உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தனர்.

இதற்கிடையில், மணமகன் சுனில் பழக்க வழக்கங்கள் சரியில்லை என பெண் வீட்டாருக்கு தெரிந்தது. இதையடுத்து, பெண் வீட்டார் திருமணத்தை நடத்த மறுப்பு தெரிவித்தனர். இதனால், கந்தப்பன் அதிர்ச்சியடைந்தார். மேலும், அவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பிறகு, திருமணத்துக்கு தடை ஏற்பட்டதால், மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை, கந்தப்பன் தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: