சென்னை: காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). ஆட்டோ டிரைவர். கடந்த 25ம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர், அவரது வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதை பார்த்ததும், செந்தில்குமாரின் தம்பி ரகுவரன் அங்கிருந்து தப்பிவிட்டார். அப்போது வீட்டில் புகுந்த கும்பல் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதுதொடர்டபாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2012ம் ஆண்டில் நாராயணமூர்த்தி என்பவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழி வாங்க இந்த வெடிகுண்டு தாக்குதல், கொலை நடந்ததாக கூறப்படுகிறது.