கவுகாத்தி: அசாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையே 3 மாவட்டங்களில் எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. கடந்த 26ம் தேதி எல்லையில் பாதுகாப்புக்கு சென்ற அசாம் போலீசார் மீது மிசோரம் போலீசாரும், சமூக விரோதிகளும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 போலீசாரும், பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். போலீசார் உட்பட 50 பேர் காயமடைந்து உள்ளனர். எஸ்பி ஒருவர் படுகாயம் அடைந்து மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அசாம் அரசு கடும் கோபத்தில் உள்ளது.