நாகர்கோவில் : திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். நாகர்கோவிலில் இன்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது வரவேற்கத்தக்கது. பிரதமர் மோடி தான் செல்லும் இடங்களில் எல்லாம் திருக்குறளை கோடிட்டு காண்பிக்கிறார். எனவே வெகுவிரைவில் திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படலாம்.