சாத்தூரில் நான்கு வழிச்சாலை கிராமங்களில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படுமா?

*பொதுமக்கள் வேண்டுகோள்

சாத்தூர் : சாத்தூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே நான்குவழிச் சாலையில் குமரலிங்காபுரம், நடுவபட்டி, எட்டூர்வட்டம், வெங்கடாசலபுரம், சாத்தூா், ஓடைபட்டி, பெத்துரெட்டிபட்டி, உப்பத்தூர் சந்திப்பு உள்ளிட்ட கிராமங்களில் பேருந்து நிறுத்தம் இல்லை.

அதனால் அக்கிராம மக்கள் திறந்தவெளியில் காத்திருந்து பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். பின்னர், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு சில பகுதிகளில் மட்டும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. ஆனால் எட்டூர்வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெயரளவில் மேற்கூரை இல்லாமல் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது.

ஆனால், யாருக்கும் பயன்பாடில்லாமல் காட்சிப் பெருளாக உள்ளது. மேலும் ஓடைப்பட்டி, பெத்துரெட்டி, கரிசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிறுத்தமே இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே, நான்கு வழிச்சாலையில் உள்ள கிராமங்களுக்கு உடனடியாக பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: