மேட்டூர் : சேலம் மாவட்டம், மேட்டூர் வனச்சரகம் பச்சபாலமலை காப்புக்காட்டில் உள்ளது முத்துமாரியம்மன் கோயில் வனப்பகுதி. இங்கு நீரோடை உள்ளதால், யானைகள் அதிக அளவில் இப்பகுதியில் தங்கியுள்ளன. இந்த வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில், பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் திரிந்த சுமார் 22 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, அளவுக்கு அதிகமாக பனம் பழங்களை சாப்பிட்டுள்ளது. இதனால் ஜீரண கோளாறு ஏற்பட்டு, யானையின் வயிறு வீங்கியுள்ளது. சுமார் ஒருவார காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த யானை திடீரென உயிரிழந்தது.