திருப்பூர்: திருப்பூரில் மெத்தை தயாரிப்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்திருக்கின்றன. திருப்பூர் இந்திரா நகரில் உள்ள புளியமரம் தோட்டம் பகுதியில் கேரளாவை சேர்ந்த கபீர் குட்டி என்பவர் கடந்த 15 வருடங்களாக பஞ்சு மெத்தை குடோன் நடத்தி வருகிறார். அவர் பஞ்சுகளை விலைக்கு வாங்கி வந்து மெத்தையாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு பணி முடித்து குடோனை போட்டுவிட்டு சென்ற பணியாளர்கள் இன்று காலை வந்தபோது குடோனில் இருந்து கரும்புகையுடன் நெருப்பு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.