சென்னை: 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.