கோயில் கொடை விழாவையொட்டி வல்லநாட்டில் மாட்டு வண்டி போட்டி

*இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

செய்துங்கநல்லூர் : வல்லநாட்டில்  கோயில் கொடை விழாவையொட்டி  மாட்டுவண்டி  போட்டி நடந்தது.  இதில் 100க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. தூத்துக்குடி மாவட்டம்,  வல்லநாடு மாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று காலை மாட்டு வண்டி போட்டிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக பிரதிநிதி   முத்து தலைமை வகித்தார்.

கருங்குளம் ஒன்றிய முன்னாள் தலைவர் முருகன்,  பெரிய மாட்டுவண்டி போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கருங்குளம்  வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி,  சின்ன மாட்டுவண்டி போட்டியை  துவக்கி வைத்தார். போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

இதில்  பெரியமாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என மூன்று  வகையான மாட்டுவண்டி போட்டிகள் நடந்தன. பெரிய மாட்டுவண்டி போட்டியில்   முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே  ரூ.25 ஆயிரம், ரூ.20  ஆயிரம், ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. சின்ன மாட்டுவண்டி  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம்,  ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் முறையே  ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: