தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17% இருந்து 28% ஆக உயர்த்தி வழங்க மாநில அரசு திட்டம்..!!

டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 3 தவணைகளுக்கு அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தது. இதே காரணங்களுக்காக தமிழ்நாடு அரசும் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக செலவு மற்றும் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் 17 விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை 28 விழுக்காடாக உயர்த்தி வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் கூடுதல் செலவீனம் ஏற்படும். சுமார் 18 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயன்பெறுவர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: