டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 3 தவணைகளுக்கு அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தது. இதே காரணங்களுக்காக தமிழ்நாடு அரசும் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக செலவு மற்றும் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.