சென்னை: திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில், பால்பண்ணை நிர்வாகத்தை மேம்படுத்தவும், கால்நடைகளை குறிப்பிட்டு கண்டறியும் வகையிலும், ஒன்றிய அரசிடம், ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா, அதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என்று கேள்வி எழுப்பினார். ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பதில்: செப்டம்பர் 2020ல், ஈ-கோபாலா என்ற செயலி பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மூலம் கால்நடைப் பெருக்கத்திற்கான தரமான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கால்நடைகளை நோயில் இருந்து பாதுகாப்பதற்காகவும், அவைகளுக்குத் தரமான உணவுகள் கிடைப்பதற்காகவும், உரிய காலத்தில் தடுப்பூசி அளிக்கவும், இந்த செயலி பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.