நகைக்காக மூதாட்டி கொலை

தண்டையார்பேட்டை:  காசிமேடு காசிமா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மனைவி அந்தோணிமேரி(60). இவர், வீட்டில் இருந்து வெளியே வராததால் நேற்று இரவு பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பார்க்க சென்றுள்ளார். அப்போது, அந்தோணி மேரி மயக்க நிலையில் கிடந்தார். தகவலின் பேரில் ராயபுரம் உதவி ஆணையர் உக்கிரபாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அந்தோணிமேரி உடல் முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்தது தெரியவந்தது. பின்னர் காசிமேடு போலீசார் அவரின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் நகைக்காக  கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.

Related Stories: