கேரள கொலையாளி சென்னையில் கைது

அண்ணாநகர்: வடமாநிலத்தை சேர்ந்தவர் தீபன்குமார்(34). கேரள மாநிலத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன் ஒரு கொலை செய்தார். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார், அந்த வாலிபரை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இதையறிந்த அவர், கடந்த 10 நாட்களுக்கு முன், கேரள போலீசார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, பேருந்து மூலமாக சென்னைக்கு தப்பி  வந்தார். இந்நிலையில், அவரது செல்போன் சிக்னலை வைத்து, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தின் உள்ளே அவர் பதுங்கி இருந்த தீபன்குமாரை  நேற்று முன்தினம் கோயம்பேடு போலீசார்கேரள தனிப்படை போலீசாரிடம், ஒப்படைத்தனர்.

Related Stories: