ரூ.25 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 33 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காஞ்சிபுரம் சரகம் காவல் துணைத் தலைவர் சத்யபிரியா போலீசாருக்கு அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின்படி காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டங்களில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையொட்டி சுமார் 25 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 33 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: