மாஜி கவுன்சிலர் பைக் திருட்டு

திருத்தணி: திருத்தணி கவரை தெருவை சேர்ந்தவர் நாகூர் பிச்சை. இவர். அதிமுக முன்னாள் கவுன்சிலர். சென்னை- திருப்பதி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு செல்ல பார்க்கிங் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்று திரும்பியபோது பைக்கை காணவில்லை. உடனடியாக அப்பகுதியில் விசாரித்தும் பைக்கை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. புகாரின்படி, திருத்தணி போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அது  பழுதானது தெரிந்தது. திருத்தணி- திருப்பதி சாலையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது நாகூர் பிச்சையின் பைக், பொன்பாடி சோதனை சாவடியை தாண்டி ஆந்திராவுக்கு செல்வது பதிவாகியிருந்தது. கடத்தப்பட்ட பைக்கில் ரூ.8 ஆயிரம் மற்றும் தனது கார் சாவி இருந்ததாக நாகூர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Related Stories: