பெண்ணிடம் 7 சவரன் பறிப்பு

திருவள்ளுர்: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி மனைவி தேவி (46). இவர் மணவாளநகர், கபில நகரில் உள்ள தனது மகள் அபிராமி வீட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தார். நேற்று முன்தினம் இரவு, மணவாள நகர் பகுதியில் உள்ள ஜவுளி கடைக்கு மகளுடன் சென்று துணி எடுத்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். கபில நகர் பகுதியில் வந்தபோது, இருசக்கர வாகனத்தை பார்க்கிங் செய்வது போல் வந்த மர்ம நபர்கள், தேவியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். 

Related Stories: