பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் ஒரு கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் உள்பட 3 தனியார் நிறுவனங்களில் பழவேற்காடு பகுதியை சேர்ந்த 250 பேர் தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை எனக் கூறியும், கூடுதலாக 1,500 பேருக்கு வேலை வழங்கக் கோரியும் காட்டுப்பள்ளியில் தனியார் கப்பல் கட்டும் தளம் முன்பு மீனவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக போஸ்டர் ஒட்டியிருந்தனர். தகவலறிந்ததும் பழவேற்காடு பகுதியில் கோட்டாட்சியர் செல்வம் தலைமையில், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜெஎஸ்.கோவிந்தராஜன், திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் ஆகியோர் அப்பகுதி மீனவர்களுடன் நேரில் வந்து நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.