சேலம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணைபதிவாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரிந்து வருவதால் பல தவறுகள் மற்றும் முறைகேடுகள் ஏற்படுவதாக புகார்கள் பெறப்படுகின்றன. இதனால், ரேஷன் கடை பணியாளர்கள் ஒரே கடையில் தொடர்ந்து 3 ஆண்டுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. அவர்கள், உடனடியாக வேறு ரேஷன் கடைகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட வேண்டும்.