திண்டுக்கல்: கடந்த 2016 தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த இலவச செல்போன்களை மக்களுக்கு வழங்காதது ஏன் என்பது குறித்து திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்தார். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டியில், ‘‘அதிமுக கொடியை காரில் கட்டியுள்ள சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு தலைவர்கள் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது.