எம்ஜிஆர் காலத்தில் வறுமை தாண்டவம் -செல்லூர் ராஜூ

மதுரை: எம்.ஜிஆர் காலத்திலும் தமிழகத்தில் வறுமை தாண்டவம் ஆடியதாக செல்லூர் ராஜூ கூறினார். மதுரை மாநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: பொதுமக்கள், காவல்துறையினருக்கு இடையூறு இல்லாத வகையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசை வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்ஜிஆர் காலத்திலிருந்தே தமிழகத்தில் வறுமை தாண்டவம் ஆடியுள்ளது. அப்போதும் கஞ்சித்தொட்டி திறந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நீட் தேர்வை எதிர்த்து ஜெயலலிதா போராடியுள்ளார். தற்போதும் எதிர்த்து நிற்கிறோம் என்றார்.

Related Stories: