டெல்லி: முடங்கும் நிலைக்குச் செல்லும் வங்கிகளின் டெபாசிட் தாரர்களின் வைப்புத் தொகை காப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. வங்கிகள் திவாலானால் டெபாசிட் தாரர்களின் ரூ.5 லட்சம் வரையிலான வைப்புத் தொகைக்கு காப்பீடு கிடைக்கும்.