திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஆன்லைன் கேம் விளையாடிய கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் கார்யம் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ். ெகால்லம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி சினி. திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு நிபுணராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகன் இம்ரான் அப்துல்லா (21). திருவனந்தபுத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். இம்ரான் ஆன்லைன் வீடியோ கேம் விளையாடி வந்தார்.