புதுடெல்லி: இன்னும் ஓய்வுபெற மூன்று நாட்களே உள்ள நிலையில் முன்னாள் சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானா, டெல்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எஃப்) இயக்குநர் ஜெனரலான குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா இன்று டெல்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். கடந்த ஜூன் 30ம் தேதி எஸ்.என்.வாஸ்தவா ஓய்வு பெற்ற பின்னர் டெல்லி காவல்துறையின் கூடுதல் பொறுப்பை பாலாஜி வாஸ்தவா கவனித்து வந்தார். இந்த நிலையில் டெல்லி போலீஸ் கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார்.