புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் 5 பேர் பலியான நிலையில், 30க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதால், அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை கிஷ்த்வார் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். மேலும், 9க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவத்தில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஸ்.டி.ஆர்.எப் மற்றும் ராணுவத்தின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. பலத்த மழை காரணமாக இன்டர்நெட் சேவை முடங்கியுள்ளது.