திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்குவதையொட்டி கஞ்சா, போதை பொருள் கடத்தல் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. கடத்தலை தடுக்க கலால்துறை, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பாலக்காடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், கலால்துறையினர் ரயில்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஆந்திரா வழியாக வந்த ரயிலில் சோதனை நடத்தியபோது சந்தேகத்துக்கு இடமான முறையில் 2 பேர் இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களது பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் ஆலப்புழாவை சேர்ந்த கிரிதர், ஜெயகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.