சென்னை: ரூ.2,467 கோடியில் சென்னை விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு மாமந்தூர், பரந்தூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. திமுக எம்.பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார். வேலூர் விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.