அரக்கோணம்: அரக்கோணத்தில் 10ஆம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்டதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். பள்ளிக்கு சென்ற சிறுவன் மோகன்தாசை கடத்தியதாக அரக்கோணம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தனிப்படை அமைத்து மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.