மும்பை : பணமோசடி புகார்களுக்கு உள்ளான 4 மொரிஷீயஸ் நிறுவனங்களில் ரூ.51,360 கோடி அளவிற்கு அதானியின் முதலீடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. Elara India Opportunities Fund, Cresta Fund, Albula Investment Fund மற்றும் APMS Investment Fund ஆகிய 4 முதலீட்டு நிறுவனங்களும் மொரிஷீயஸ் நாட்டில் இருந்து இயங்கி வருகின்றன.இதில் 2 நிறுவனங்கள் பணமோசடி புகார்களிலும் 1 நிறுவனம் வங்கிக்கடன் மோசடியிலும் சிக்கி உள்ளது. மற்றொரு நிறுவனம் எத்தியோப்பிய அரசால் தடை செய்யப்பட்டவையாகும். இந்த 4 நிறுவனங்களின் மொத்த முதலீடுகளில் 90% அளவிற்கு அதானியின் முதலீடுகள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.