லஞ்சம் வாங்கிய வேளாண்துறை இளநிலை உதவியாளர் கைது

விழுப்புரம்: திருநாவலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.32,800 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயி ஏழுமலை என்பவருடைய 650 மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய ரூ.32,800 லஞ்சம் கேட்டுள்ளார். முதல்தவணையாக ஏற்கனவே ரூ.10,000 வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.22,800 பெற்றபோது குணசேகரன் பிடிபட்டார்.

Related Stories: