சென்னை : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்த நீதிபதி இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில்,தகவல் அறியும் சட்டத்தின் கீழ் புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான தகவல்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டேன்.
ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சகம் நான் அனுப்பிய கேள்வி மனுவை திருப்பி அனுப்பியதுடன் இந்தியில் பதிலளித்தது. எனக்கு அந்த மொழி தெரியாது.