ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த உடற்தகுதி இரண்டாம் நாள் தேர்வில் 103 பங்கேற்கவில்லை. 84 பேர் தகுதியிழந்தனர்.இது தொடர்பாக ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் தெரிவித்துள்ளதாவது:ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி எழுத்துத் தேர்வில் தேறியோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வு நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.